சாமானியனின் குமுரலாக அரசிற்கு:
சிறு சிறு தவறுகள் பெரிதாகி ,
சிறகுகள் இல்லா முடமாகி ,
முடக்கிவிட்டவன் மேலோங்கி,
முடங்கியவன் இங்கே குழிக்குள்ளே!
மாய்த்தவன் இருப்பதோ மண்ணுக்குள்ளே ,
தவறு எங்கே மானிடா என்னுள்ளே.
புலம்ப வேண்டாம் நீ இங்கே .!
உன் எதிர்காலம் உனக்குள்ளே!
வாழ்ந்தழிவது எங்கள் பண்பில்லை!
வளர்ந்தோங்குவது அவனில்லை!
வியாபாரம் என்னும் விலை நிலத்தில்,
விருந்தோம்பலை நீ நாடினால் ,
நீ என்ன மன்னனா இந்நாட்டில் !
வளர்ந்து வருகிறதா? பொருளாதாரம்
புரிந்து முடியாவில் , இந்தவதாரம்
தினம் உழைப்பவன் எடுப்பதோ தசாவதாரம் !
பொருளாதாரக்கொள்கைத் தேவையில்லை,
பண முதலாளிகள் இல்லையேல் என்தொல்லை,
நாங்கள் இருக்கின்றோம் உனக்கு
இனிக் கவலை உனக்கெதுக்கு,
கவலையைத் தூக்கி எரிந்து விடு,
கணிசமாக நீ உயர்ந்து விடு,
விட்டுவிடு அவர்களின் பொருளாதாரக்கொள்கையை,
பண முதலைகளின் ஒப்பந்தம் வேண்டா உனக்கு ,
தெளிந்து வந்து விடு எதிர்க்காலம் இருக்கு,
இனி நீ !இந்தியாவின் எதிர்காலத்தை நோக்கு,
பாவம் என்பதில் பயனில்லை,
பயத்தால் ஏதும் நிகழவில்லை,
இனி விலைப்பொருள்கள் இருக்கின்றது,
கவலையில்லை ,
விட்டுவிடு அவன் கூட்டணியை,
நாம் திரட்டுவோம் ஒரு அணியை,
நமக்கென்று ஓர் பொருளாதாரம்
தற்சார்புக்கொள்கைக்கே முன்னுதாரணம்,
கலங்கிவிடாதே! அவர்கள் காட்டும் வித்தைக்கு!
விலகிவிடாதே !தேர்தலுக்குப்பின் !
எங்களை விட்டு...
நீயும் போடு ,அவர்களின் சுரண்டலுக்கு பூட்டு !
நாட்டு மக்களின் உழைப்பைக்கொண்டு முன்னேறிக்காட்டு ,
![]() |
கீழடிப்பொருட்கள் |
....
தென் திசையில் ஒரு இனமுண்டு ,
தனியே அவற்கொரு குணமுண்டு,
செல்வ வளங்களை பயன்படுத்திக்கொண்டு,
நம் நாட்டு மக்களின் முயற்சியைக்கொண்டு ,
பன்னாட்டுக்கிடையில் தனியே
நின்று வென்றுக்காட்டு
என்றும் வீழ்வதல்ல என்னினம்!
விவசாயம் செய்வோம் தினம் தினம்!
வேட்டையாடி களையெடுப்போம் நல்தினம்!
விவசாயம் செய்வோம் தினம் தினம்!
-----------------------------அக்தர் ரூமி--------------------------------------------------
விவசாயியை வாழ வைப்போம்!!!
பொருளாதாரத்தில் உயர்ந்துக்காட்டுவோம்....
0 Comments