சாமானியனின் பாட்டு :
இது ரத்தம் சிந்த பிறந்த மண் அல்ல ;சிந்த வைப்பனை சிதரடிக்கும் மண்!
மறந்து விடாதே இது பகுத்தறிவு நிறைந்த மண்!
இங்கே பகுத்தறிவாளர்கள் வாழ்ந்த மண் !
நீ மதவெறியை திணிக்க நினைத்தால் உன்னை மாற்றி விடுவோம்! இங்கே கசாயம் பூசும் உன் வேலைகளும் செல்லுபடியாகாது
இங்கே பகுத்தறிவாளர்கள் வாழ்ந்த மண் !
நீ மதவெறியை திணிக்க நினைத்தால் உன்னை மாற்றி விடுவோம்! இங்கே கசாயம் பூசும் உன் வேலைகளும் செல்லுபடியாகாது
செல்லுபடி யாகா ! செல்லுபடி யாக! இங்கே நீ செய்யும் யோகா...
ஓடி விடு !நீ ஓடி விடு !வந்தவழி அறிந்தோ டிவிடு ...
திருந்தி விடு !நீ திருந்தி விடு நாங்கள் திருத்தும் முன், நீ திருந்தி விடு !
நிறுத்தி விடு! நீ நிறுத்தி விடு !உன் பயங்கர வாதத்தை நிறுத்தி விடு !
உன் கொள்கைகள் இனி செல்லுபடி யாகா !
வேற்றுமையில் ஒற்றுமை எப்பொழுதும் நீங்கா !
இதை நீ அறியவில்லையா மாங்கா !
கண்டாயா ஆற்று நீர் ஊற்று நீருக்கு முன் தோன்றிய கடல் நீருக்கருகில் எங்கள் ஒற்றுமையை!!!...
வீழ்வேனென்று நினைத்தாயோ மடையா? மக்கிப்போய் மண்ணில் ,
மண்புழுவாய் உரமாகுபவர்கள் அல்ல நாங்கள் இம்மண்ணின் பாதத்தை
தழுவி வந்தவர்கள் நாங்கள்
விதையாகுவோமே தவிர வீழ மாட்டோம் !
பாரதி என் பைந்தமிழ் புலவன் .
இந்நாடு பழங்காலத்திலேயே பழம்பெரும் வரலாற்றை கொண்டு விளங்கிக் கொண்டிருந்த நாடு .
உன் சாதிப்போர்வையை கிழிக்க தயாராகிறது எங்கள் சமூதாயம். எங்களைப்பொறுத்த வரையில்
இம்மண்ணில் இரண்டே சாதி ,
அது ஆண்சாதி !! மற்றும் பெண் சாதி!
உன் சாதிச் சாக்கடை எங்களின் பகுத்தறிவால் நிச்சயம் சீராக்கப் படும்...
வாழ்க தமிழ்! வளர்க்க நின் புகழ் !
---------ரூமி
மண்புழுவாய் உரமாகுபவர்கள் அல்ல நாங்கள் இம்மண்ணின் பாதத்தை
தழுவி வந்தவர்கள் நாங்கள்
விதையாகுவோமே தவிர வீழ மாட்டோம் !
பாரதி என் பைந்தமிழ் புலவன் .
இந்நாடு பழங்காலத்திலேயே பழம்பெரும் வரலாற்றை கொண்டு விளங்கிக் கொண்டிருந்த நாடு .
உன் சாதிப்போர்வையை கிழிக்க தயாராகிறது எங்கள் சமூதாயம். எங்களைப்பொறுத்த வரையில்
இம்மண்ணில் இரண்டே சாதி ,
அது ஆண்சாதி !! மற்றும் பெண் சாதி!
உன் சாதிச் சாக்கடை எங்களின் பகுத்தறிவால் நிச்சயம் சீராக்கப் படும்...
வாழ்க தமிழ்! வளர்க்க நின் புகழ் !
---------ரூமி
0 Comments